ஒரு ஜாலி கற்பனை


வணக்கம் நண்பர்களே...இது ஒரு ஜாலி கற்பனை...

உலகக்கோப்பை ஜுரம் ஆரம்பித்துவிட்டது. இனிமேல் நமது மக்களுக்கு ராசாவின் ஊழலோ, நித்தியானந்தாவின் வழக்கு நிலையோ, மற்ற நிகழ்வுகளோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்த போகும் செய்திகளாக முக்கியத்துவம் அளிக்கப்பட மாட்டாது...தேர்தல் வரும் சமயத்தில் உலகக்கோப்பையும் வந்து நமது மக்களின் மறதிக்கு நல்ல தீனி போட்டுவிடும்...நாளிதழ்களின் தலைப்பு செய்திகளில் இடம்பிடிக்க,கீழ்கண்ட அறிவிப்புகள் கூட வரலாம். யார் கண்டது?



முஸ்கி: உலகக்கோப்பையை இந்திய வென்று விடுகின்றது. அந்த வெற்றிக்குப் பின்னால் உள்ள மர்மத்தை ஜெட்டி-லீக்ஸ் நிறுவனம் வெளியிட, நாடெங்கும் தொற்றிக் கொள்கிறது பரபரப்பு. 



" இந்திய ஜனநாயகத்தை சீர் குலைக்க, மக்களின் மறதியை தேர்தல் நேரத்தில் அதிகப்படுத்த, இந்திய அணி வெற்றி பெற அணி வீரர்களுக்கு தொடர் முழுதும் ஆளுக்கொரு குவார்ட்டரும், மேட்டரும் செய்து கொடுத்துள்ளது குருணாநிதியின் மைனாரிட்டி கு.மு.க அரசு.இதனைக் கண்டு தமிழகமே சொல்லொண்ணா துயரப் படுகிறது." - எதிர் கட்சி தலைவி பே குற்றச்சாட்டு...



"என் மீது அந்த அம்மையார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு, ஒட்டு மொத்த தமிழர்களையும், சிறுபான்மையின மக்களையும் இழிவுபடுத்தப் படும் வகையில் அமைந்துள்ளதை கண்டு, நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன். குற்றம் சுமத்தப்படுவதாலேயே ஒருவர் குற்றவாளியாகி விட முடியாது. என் பாசத்துக்குரிய தம்பியாம் சானி, என்னைப் போலவே தானும் தலைமை இடத்தில் மிகுந்த சிரத்தைகளுக்கு இடையில் (கையாலாகாத நிலையில் ஒரு டம்மி பீஸ்) வழிநடத்தி வருவதாக சொன்னார். ஆம் என்னை என் மக்களாகிய நீங்கள் என்னை கடலிலே தூக்கி வீசி, நான் கட்டுமரமாக மிதந்து தடுமாறுவதைப் பார்த்து அவரே தான் அணியிலுள்ள துடுப்பு ஆட்ட வீரர்களைக் கொண்டு என்னை காப்பாற்றினார். அதற்கு கைம்மாறு கருதும் பொருட்டாக அவருக்கும் அணி வீரர்களுக்கும் நான் வழங்கிய சலுகைகளை திரித்து கூறி வருகின்றார் அந்த அம்மையார்.இப்படி தான் கற்புக்கரசியாம் , சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை எரித்த கண்ணகி, கோவலனிடம்..." என்று கூறும் போதே அவரது எழுதுகோலின் மை தீர்ந்து விடுகின்றது.



"என்னைப் பார்த்து குடிகாரன் என்று சொன்ன பே, இப்போது கொலைஞரையும் அது சம்பந்தமாக தொடர்புபடுத்தி அறிக்கை விட்டிருக்கிறார் மக்களே. ஜிம்.ஜியாரின் அடுத்த உண்மையான வாரிசான நான் உங்களிடம் ஒன்றே ஒன்று தான் கேட்கிறேன் மக்களே...ஒரே ஒரு முறை எனக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள், கேப்டனாகிய நான் உலகக்கோப்பையை உங்கள் வீட்டுக்கே வரவழைக்கிறேன்." - சு.மு.தி.க தலைவர் கேப்டன் குஜயகாந்த் கொதிப்பு.



"சானி மதுபான, மங்கை கேளிக்கைகளில் ஈடுபட்டு நமது இளைஞர் சமுதாயத்தை பாழ்படுத்தி வருகிறார். இப்படியே போனால் என் தொண்டர்கள் உலகக்கோப்பை நடக்கும் மைதானத்துக்குள் புகுந்து இந்திய வீரர்கள் விளையாடும் போது அவர்களது மட்டைகளையும், பந்துகளையும் கபளீகரம் செய்ய தயங்கமாட்டார்கள். " - பா.ம.க ராமதாஸ் எச்சரிக்கை.



"குடித்தால் என்ன?உலகக்கோப்பை வாங்கினோமா இல்லையாங்கறது தான் கேள்வியே? ஜப்பானில் டாகேஷி கிட்டானோ,மிட்சுபிஷி ஹிடாச்சி கூட தான் குடிக்கிறாரு...நம்ம ஆளுங்களுக்கு உலக லெவெல்ல குடிக்க தெரியல...இன்னமும் கம்மா கரைல உக்காந்துகிட்டு கள்ள சாராயமும், கள்ளுமே குடிச்சுட்டு இருக்காங்க.... சொல்ல போனால் நந்தலாலா என்னுடைய கதை தான்..நான் மப்போட தான் அந்த படத்தையே எடுத்தேன். அந்த திமிரு தான் என்னை இன்னிக்கு ரோட்டுக்கு கொண்டு வந்துடுச்சு..." வருங்கால ஒலக சினிமா மேடையில் கிஷ்கின்.



"என்னுடைய புத்தகத்தை சரோஜாதேவி புத்தகம் என்று சொன்ன கிஷ்கின் ஒரு மனநோயாளி. மனதில் நினைத்த பெண்ணை வைத்து மைதுனம் செய்துவிட்டு பிறகு நான் தான் அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு தகப்பன் என்பார். என்னைப் போன்ற எழுத்தாளர்கள் எல்லாம் கேரளாவில் இருந்தால் இந்நேரம் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடி இருப்பார்கள். தமிழ் நாட்டில் எதிர்பார்ப்பது என் தப்பு தான். இருப்பினும் எனது படைப்புகள் வெளிவர உங்களால் முடிந்த பண உதவியை நான் வைத்திருக்கும் டாஸ்மாக் அக்கவுன்ட்டில் கட்டி விடுங்கள். இப்போது இந்திய வீரர்கள் மேல் சுமத்தப் பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கும் இப்படி தான் சம்பந்தமே இல்லாமல் உளறி இருக்கிறார்." - எழுத்தாளர் பாரு தனது தளத்திலிருந்து.



"யே பாரத் மே...இந்திய இறையாண்மை கெட்டுவிட்டது ஹை..மெய்ன் பஹூத் பீல் கர்த்தா ஹூம்..." போங்கிரஸ் தலைவர் போணியாகாத வாந்தி குமுறல்...



"என்னை கோழையாக வாழ வைக்கும் என் உயிரும் மேலான இளிச்சவாய ரசிக தெய்வங்களுக்கு, பை த பை... ஆண்டவன் இருக்கான்..மக்கள் பாத்துட்டு இருக்காங்க...மக்கள் இப்போ தெளிவா இருக்காங்க...அவங்களை யாராலும் ஏமாத்த முடியாது..." கல்தான் படபிடிப்பில் கஜினிகாந்த்.



"இந்திய இறையாண்மை கெட்டுவிட்டதுனு சொல்றாங்க...இந்திய இறையான்மைனா என்ன என்றே நமக்கு தெரியாது. பத்து வருஷம் முன்னாடி சபைல மொச்சை கொட்டை தின்னுட்டு பாம் போட மாட்டாங்க..மீறி போட்டா எல்லாரும் சிரிப்பாங்க...ஆனா இப்போ எல்லாம் டாஸ்மாக்ல குடிச்சுட்டு அவிச்ச கடலையும்,முட்டையும் சைட் டிச்ஷா

தின்னுட்டு ரோட்டுல,வீட்டுல,நாட்டுலன்னு பாம் எக்கச்சக்கமா போடுறாங்க...அதை விட்டுட்டு பாகிஸ்தான்ல இருந்து ஒருத்தன் வந்து பாம்பேல பாம் போட்டா அது நமக்கு வெறும் நியூஸ் தான்...ஏன்னா பாம் போட்டது பாம்பேயில..இங்க இல்ல..இதுக்கெல்லாம் முடிவு கட்டனும்ன்னு தான் நான் அடுத்த படத்துல 550 வேஷத்துல பாம் போடுருவனா நடிச்சு ஆஸ்க்கார் கண்டிப்பா வாங்கிடுவேன்." - குமலகூசன்...

"முன்னாடி கும்.ஜியார், அப்புறம் பெயில் லலிதா, இப்போ நான்..." காமெடி நடிகர் குஜய் வீணாப்போனவிகடனில் அவரது குணம் திறக்கிறார்...



"எல்லா நிகழ்ச்சிக்கும் என்னை கட்டாயப் படுத்தி வர சொல்லி பின் குவார்ட்டர் ஊற்றிக் கொடுத்து மேடையில் வம்பிழுக்க சொல்லி என்னை வற்புறுத்துறாங்க அய்யா..அதுக்கு நீங்க தான் எதாச்சும் வழி பண்ணனும்...சரக்குக்கு ஊறுகாய் கூட கொடுக்க மாட்டேன்கிறாங்க...நீ தான் ஊறுகாய் போயி பேசுடான்னு சொல்லுறாங்க..."- வேஷக்

கொலைஞன்னுக்கு வேரறுக்கும் விழாவில் பேசிய மஜீத்தின் தைரியம்.


"இலங்கையிலே அங்கே என் தமிழன் மடிந்து கொண்டிருக்கிறான். இங்கே நமக்கு கிரிக்கெட் தேவைப்படுகிறது...அங்கே சிந்தப்படும் ரத்தம்,கண்ணீர்,சளி,எச்சில் எவ்வளவு தெரியுமா? மானங்கெட்டு போய்க்கொண்டிருக்கிறோம்." - கூமான் கூவல்...

இறுதியாக மிஸ்டர் பொதுஜனம்..

"யே அருக்காணி அக்கா..விதையகாரியன் சின்னத்துக்கு ஒட்டு போட்டா 5000 ரூவா தாராங்களாம். போட்டுட்டு வந்துருவோம் வாக்கா.. "

இறுதியாக பதிவுலகில்...



குஜையை எப்படி டா சொல்லலாம் சோமாறி...

மஜீத்தை பத்தி எழுத உனக்கு என்னடா அருகதை இருக்கு...

கஜினியை பத்தி எழுதுருயே...உனக்கு ஹிட்ஸ் வேணும்னா கேளு பிச்சை போடுறோம்...

குமலகூசன் ஒரு பெரிய அறிவு ஜீவி...அவரைப் பத்தி எழுதுறதுக்கு நீ பேசாம உடம்பை வித்து பொழைக்கலாம்...

போடாங்...#^@^#&*#^*(.. சு@#$னி


அடுத்த ஐந்து வருஷம் கழித்து மீண்டும் இவை தொடரும்...அறிக்கை விடும் சில பேர்கள் மாறி இருக்கலாம்.

1 ரீலு ஓடிருக்கு..:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 
டக்கால்டி © 2010